ஓட்ஸ் ஒரு சிறந்த நோய் நிவாரணி


பிரச்சனைகளும் நோய்களும் இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது உண்மையில் நடக்கிற காரியமா? நடக்கிற காரியம் தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் நிரூபித்துள்ளனர்.
இதற்கு ஒரே வழி, ஓட்ஸ் சாப்பிடுங்கள்.ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன. நீரழிவு, இரத்தக் கொதிப்பு, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் இரத்தக் கொலஸ்ட்ரால் (இது ஆண்மைக் குறைவையும் ஏற்ப்படுத்துகிறது), புற்றுநோய் முதலிய நோய்களையும், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாதத் தன்மைகளையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் ஓட்ஸ் குணப்படுத்திவிடுகிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய உணவு மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. காரணம் என்ன? ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணம் உடலில் தொற்று நோய் பரவுவதை தடுக்கிறது. தமனி இறுக்கம் குறைந்து மூச்சு விடுவதில் சிரமத்தை குறைக்கிறது. உடல் பலவீனத்தை குறைத்து திசுக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, உற்சாகமாக வாழ தயாராகிவிடுகின்றனர். இத் தன்மை ஓட்ஸ் உணவில் நேரடியாகக் கிடைக்கிறது.

11,12 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சப்பிட்டார்கள். அதன் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிட்டு வந்ததை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள் தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன் சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம் தான் என்பதையும், குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அதனால் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர்.எனவே ஓட்ஸ் மீல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள்.

குளங்களில் மீன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்சை அதிககளவில் உணவாகப் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கும். பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50கிராம் வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டுவரவும். கோதுமையும் பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும் போது சேர்த்துச் சாப்பிடவும். இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும்.

இதுபோன்ற பல நன்மைகளை தரும், என்றும் இளமை காக்கும் ஓட்ஸ் தினமும் ஓரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழப்பழகுங்கள்.