வாய் துர்நாற்றமா?

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

  1. தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
  2. உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள்
  3. ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
  4. அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

10 tips to cure Mouth odor  (bad breath)

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
10 tips to cure Mouth odor  (bad breath)
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

தொந்தி குறைய வேண்டுமானால்

"உங்கள் தொந்தி குறைய வேண்டுமானால் நன்றாக ஓடுங்கள்"

"ஓடுவதா? ?

ஓடத்தான் வேண்டும்..

"ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். உடற்பயிற்சியின் முதல் ஆதாரமே நடைதான். நன்றாக கைவீசி நடந்து சென்றாலே போதும் உங்கள் தொப்பை கரைய ஆரம்பித்துவிடும்"


ஒரே நாளில் கரைய "சாத்தியமே இல்லை.. எப்படி தொப்பையை சிறுக சிறுக சேர்த்தீகளோ அதுபோலவே சிறுக சிறுக தான் கரையும். பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்த்த தொப்பையை 10 நிமிடங்களிலா குறைக்க முடியும்? அவ்வாறு குறைக்க முடியும் என்று சொல்லும் விளம்பர மருந்துகள், இயந்திரங்கள் அனைத்தும் பொய்யானதே..! நம்மை முட்டாள்களாக்குவது. வீண் பணவிரயம்.

கொஞ்சம் விவேகமாக நடந்துகொண்டால் உடல் பருமனையும், தொந்தியையும் குறைத்துக்கொள்ளலாம்."

"எப்படி?"

நமது உடம்பில் குறிப்பாக மூன்று இடங்களில் சதைப் பற்று இருக்கிறது..

முதலாவதாக இடுப்பில் அதிகம் இருக்கும்.

இரண்டாவதாக நெஞ்சில் இருக்கும்.

மூன்றாவதாக தலையில் இருக்கும். இவைகள் உடம்பில் செங்குத்தாகச் சீராக இருந்தால் நடக்கும் நபருக்கு அதிகச் சிரமம் இல்லாமல் இருக்கும். நடக்கும்போது கால்கள் கடிகாரத்தின் பெண்டுலத்தைப் போன்ற அசைவு இருக்க வேண்டும்.

வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி - ஒரேயடியாக உட்கார்ந்துகொண்டு, படுத்துக்கொண்டு இருப்பது தவறு.

ஒரு மணி நேரத்திற்கொரு முறையாவது எழுந்து சற்றே நடக்க வேண்டும். மேல்மாடியிலிருந்து கீழிறங்க லிப்ட்டை உபயோகிக்காமல் நடந்து செல்லலாம்.

இரவு படுக்கப்போகும் முன்பு ஒரு கிலோமீட்டர் வரை காலார நடந்துவிட்டு வரலாம்.

உணவுக் கட்டுப்பாடு

அரிசி, கோதுமை, போன்றி தானிய வகைகளைப் பாதியாக்க் குறைக்க வேண்டும்.

அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அனாவசியமான கார்போஹைட்ரேட் உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய், அல்லது நெய் மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும்.

அதிக உப்பிட்ட பொருட்களையோ, அதிக காரமான பொருட்களை குறைக்க வேண்டும். இத்தகைய பொருட்கள் நா வறட்சியை ஏற்படுத்தும். இதன் பயனாக அதிக நீர் பருக வேண்டும். இதனால் உடல் பருமனாக மாற ஏதுவாகும்.

அதிக காய்கறி உண்ணலாம், பழரசம் பருகலாம்.

ஆனால் வாழைப்பழம் சாப்பிட வேண்டாம். இது உடல் பருமனுக்கேற்றது. உருளைக்கிழங்கு, நிலக்கடலை, சர்க்கரை போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரவு உணவு, உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே எடுத்துகொள்ள வேண்டும்.


இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தீர்களேயானால் உங்கள் தொப்பை காணாமல் கரைந்து போயிருக்கும்.

உடல் எடை குறைய இரண்டு முட்டைகள் மட்டுமே!

உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்…
குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை உணவாக இரு முட்டைகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், அதிக பருமன் மிக்கவர்களது உடல் எடையானது, வேறுவகை காலை உணவை உட்கொள்பவர்களைக் காட்டிலும் 65 சதவிகித அளவில் குறையக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.
“இரு முட்டைகளை காலை உணவாக உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புத்துணர்வும் பெறலாம்,” என்றார் துரந்தர்.
இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முட்டை உணவு தொடர்பான முந்தைய ஆய்வுகளின் முடிவுகளையும் உறுதி செய்துள்ளது.
அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான சாத்தியமும் குறைவு என்கின்றன, முந்தைய ஆய்வுகள்.
இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் எடை குறைய வேண்டுமா!

உடல் எடை குறைய
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து நீ எந்தக்கடை அரிசி சாப்பிடுகிறாய்? என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார்.
பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.
ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடைகூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம்.
குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.
உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்
சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.
சரியான நேரத்தில் சாப்பிடவும்.
எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.
மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.
இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.
பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.
பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.
மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.
வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.
மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.
சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.
விடியற்காலையில் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால் விரைவில் உடல் இளைத்து விடும் தேன் உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் கரைத்து விடும்.
இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடு படுத்தி ஆற வைத்து காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறையும்.
உடல் எடையை குறைக்க உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.
பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் அழகான தோற்றம் கிடைக்கும்

வயிற்றில் தொப்பை போடுவதற்கு

உடலை, ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விருப்பம் கொள்வர். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆங்காங்கே கொழுப்புகளை தேக்கிவைக்கிறது. குறிப்பாக வயிறு, தொடை, பின்புறம் போன்றவற்றில் கொழுப்பு அதிகரிப்பதால் பெண்களின் வடிவம் மாறி அழகு காணமல் போய்விடுகிறது. இது அவர்களின் மகிழ்ச்சியை பாதிக்கிறது. எனவே இயற்கையிலேயே ஆழிலை போன்ற வயிறு வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.
சரிவிகித நீர்ச்சத்து
உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பை போட்டுள்ளதா? அதைப்பற்றி கவலைப்படாமல் அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். மேலும் தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி
தொப்பை இருக்கிறது என்பதற்காக உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உற்சாகமான நடை
தொப்பை வயிறு குறைய தினசரி அரைமணிநேரமாவது உற்சாகமாக நடக்கவேண்டும் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடை பயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகள்
நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.
செயற்கை குளிர்பானங்கள்
வயிற்றில் தொப்பை போடுவதற்கு செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப்படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால் இரண்டு வாரங்களுக்கு அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
தொப்பை வயிறு உள்ள பெண்கள் இதை கடைபிடிக்கலாமே?

தொப்பை குறைய உடற்பயிற்சி

பாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும்.
உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும்.
உங்கள் கால்களை மெதுவாக தரையில் இருந்து மேலே உயர்த்தவும்.
உங்கள் கால்கள் 45 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.

 தொப்பை குறைய உடற்பயிற்சி

கால்களை மட்டும் உயர்த்த வேண்டும்.
இந்த கோணத்தில் சில நிமிடங்கள் இருந்து பின் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

தொப்பை குறைய


தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி.
  2. தேன்.
செய்முறை:
இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.

12 Ways to Help Your Child Build Self-Confidence

Self-esteem is your child's passport to lifetime mental health and social happiness
It's the foundation of a child's well-being and the key to success as an adult. At all ages, how you feel about yourself affects how you act. Think about a time when you were feeling really good about yourself. You probably found it much easier to get along with others and feel good about them.