உடற்பயிற்சியும் ஆரோக்கியமும்




உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால்அதை செயல்படுத்த முயல்வது ஒரு சிலரே . அதிலும் அதை செயல் படுத்துவது மிகச் சிலரே. 
பல முறை முயன்று பார்த்துள்ள ,என் அனுபவத்தில் இருந்து சில சில்லறை யோசனைகள். 
1. உடற்பயிற்சியை புதியதாய் துவக்குபவராய் இருந்தால் , குறைவான நேரமே செய்ய முயலுங்கள். முதல் நாளே நானும் செய்தேன் என்று ஒரு மணி நேரம் செய்தால், அடுத்த நாள் உங்களுக்கு நீங்களே பொய் சாக்கு சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்.
கொஞ்சம் கொஞ்சமாய் செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதைத்தான் உடம்பும் ஏற்றுக் கொள்ளும்
2. துணைக்கு யாரேனும் கிடைத்தால் நல்லது .இருவர் சேர்ந்து செய்யும் போது அதில் ஆர்வம் ஏற்படுகிறது. கிடைக்கவில்லை என்றால் அதைவிட நல்லது. 
அவர்களின் காரணமாய் சோம்பல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அவர்கள் வரவில்லை ,அதனால் நாளை செய்துக் கொள்ளலாம் , என்று தள்ளிப் போட வேண்டி இருப்பதில்லை.
3. நல்ல இசையை கேட்டுக் கொண்டே செய்தால் போரடிக்காது. ' வாக் மேனை ' காதில் மாட்டிக்கொண்டு வானொலி கேட்கலாம். 
4.உடலை அதிகம் வருத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். பயிற்சியை தொடர்ந்து செய்ய இது வழி வகுக்கும்.
5.கஷ்டப்பட்டு ஒரு மாதம் செய்து விடுங்கள் .அது ஒரு பழக்கமாக மாறிவிடும். மூன்று மாதங்கள் செய்துவிட்டீர்கள் என்றால் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம்,  உங்களைத் தொடர்ந்து செய்யத் தூண்டும். ஒரு நாள் செய்யாவிட்டாலும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு , உங்களை பயிற்சி செய்ய வைக்கும் .
நீங்கள் சாதனை படைக்க வேண்டுமா?
குட்டி போட்ட பூனை போல அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமா? ஒரே பதில் உடற்பயிற்சி செய்யுங்கள்!
உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் சீராகிறது என்பதுடன் மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது என்பதுதான் புதிய கண்டுபிடிப்பு.
தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளையின் தசைநார்கள் சுண்டி விடப்பட்டு நன்கு இயங்குகின்றன. இதனால் சுறுசுறுப்புடன் சிந்தித்து அதே ஆர்வத்துடன் வேலையும் செய்ய முடிகிறது.
அதிகபட்சம் தினம் முப்பது நிமிடங்கள் செய்ததுமே மூளைக்கு வெள்ளம்போல் ஆக்ஸிஜனும் குளுகோஸும் பாய்ந்து விடுகின்றன. இதனால் நமது மூளை ஆற்றல் குறையாமல் உச்சநிலையில் செயல்படுகிறது.
மனிதனின் மூளையில் உள்ள செல்கள் முப்பது வயது ஆரம்பமானதும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பிக்கிறது. இதனால் அடுத்த பத்தாண்டுகளில் மனிதனது வேலைகளில் மந்தம் ஞாபகமறதி தரக்குறைவு முதலியன ஏற்பட்டு வருகின்றன. பிரச்னைகளைத் தீர்க்க சிந்திக்கவோ திறமையாகச் செயல்படமோ இயலாமல் போய்விடுகின்றன.
ஆனால் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையில் அடைபட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயல்கள் விடுவிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் எப்போதும் போலச் சிந்தித்து சுறுசுறுப்பாக வாழ மூளை நன்கு செயல்பட உதவுகிறோம். எளிய உடற்பயிற்சியே இந்த மூளை ஆற்றலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு.
மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் பிராட் ஹாட்ஃபீல்டு என்பவர் உடற்பயிற்சியின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மனமும் மூளையும் மிக விழிப்புணர்வுடன் இருக்கும். ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் நிரம்பிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். வேலை பார்ப்பவர்கள் கூட விடாமுயற்சியுடன் வேலை பார்ப்பார்கள் என்பதைகண்டு பிடித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதால் டென்ஷனான பிரச்னையின் போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது என்று உடற்பயிற்சியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளவர்கள் இவரிடம் கூறினார்கள்.
40 - 50 வயதுக் கார் டிரைவர்கள் சற்றுத்தள்ளியே வேகமாகச் சென்று தங்கள் கார்களை நிறுத்துவார்கள். இதற்குக் காரணம்இ உடற்பயிற்சியால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான். மூளையின் செல்கள் தடைப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர் ஸ்டாப்பின் முன்பே 20 அடி பின்னால் தள்ளித்தான் நிறுத்துவார். வீட்டு டிரைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி நேரத்தில் ஓட்டி சரியாக வாசலில் நிறுத்துவார்கள். உடற்பயிற்சி செய்பவர் என்றால் வழக்கம் போல் ‘சர்’ரென்று வந்து வாசல் எதிரில் சரியாக நிறுத்துவார். இதுவும் இவர் கண்டுபிடித்தவையே.
உடற்பயிற்சி செய்வதால் மூளை சுறுசுறுப்பாக- திறமையாகச் செயல்படும் என்பதை எலிகளை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். ஒரே இடத்தில் வைக்கப்பட்ட எலிகளையும் அங்குமிங்கும் ஓடியபடியே இருக்கும்படியாகச் சில எலிகளைப் பழக்கியும் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள்
ஓடி விளையாட பயிற்சி கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையில் மூளை செயல்படத் தூண்டும் டாப்மைன் என்ற இரசாயனப் பொருள் நன்கு சுரந்திருந்தது. ஞாபக சக்தியைத்தரும் பலவிதமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி சீராக்கி ஒரு முகச்சிந்தனையைத் தூண்டும். 
மனிதர்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மூன்று பொருட்களும் தங்கு தடையின்றி உற்பத்தியாகி எந்த வயதிலும் திறமையுடன் வாழமுடியும்.
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பேராவலுடன் உள்ளவர்கள் நடைப்பயிற்சி உடற்பயிற்சி நீச்சல் என்று இதில் எந்த ஒன்றைப் பின்பற்றினாலும் தினம் அரைமணி நேரம் டென்னிஸ் பயிற்சியும் பெறுங்கள். உங்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல் வேகம் என அனைத்தையும் டென்னிஸ் பயிற்சியின் மூலம் பெற்றுவிடலாம் என்று டாக்டர் பி. ஹாட்ஃபீல்டு கூறுகிறார். அந்த அளவிற்கு டென்னிஸ் பயிற்சி மூளைக்கு வல்லமை அளிக்கிறதாம். ஆக வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் மூளையைத் துருப்பிடிக்க முடியாமல் செய்ய உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்.
நன்றி: துரை

No comments:

Post a Comment