மருந்தாக பயன்படும் தவாரங்கள், செடி, கொடிகள், விலங்குகள், பறiவைகள், நீர் வாழ்வன

சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் தாவரங்கள்:
கொடிகள்:
1. தூதுவளை 2. முசுமுசுக்கை 3. வேலிப் பருத்தி 4. தாமரை 5. கும்மட்டிக்காய் 6. கல்யாணப் பூசணி 7. பாகல் 8. கோவைக் காய் 9. புடலங்காய் 10. பீர்க்கங்காய். 11. நெருஞ்சில் 12. பூனைக் காலி வித்து 13. மிளகுக்காய் 14. பயிற்றங்காய் 15. பிரண்டை 16. நஞ்சறுப்பான் 17. முடக்கற்றான் 18. மூக்கரட்டை 19. தொட்டாற் சுருங்கி 20. உப்பிலாங்கொடி 21. சிறுபுள்ளடி 22. கையாந்தகரை 23. கொட்டைப் பாசி 24. அம்மான் பச்சரிசி 25. வல்லாரை
செடிகள்:
1. அவுரி 2. அரிவாள் மூக்குப் பச்சிளை 3. ஆடாதொடை 4. எருக்கம் 5. குப்பை மேனி 6. தும்பை 7. சிறியா நங்கை 8. சிறுசின்னி 9. விரலி 10. தழுதாழை 11. கூத்தன் குதம்பை 12. ஆமணக்கு 13. தவுசு முருங்கை 14. ஆவாரை 15. நின்றாற்சிணுங்கி 16.தேள் கொடுக்கு இலை 17. நீர்முள்ளி 18. ஊமத்தை 19. சிறுபீளை 20. மணத்தக்காளி 21. நல்வேளை 22. துளசி
புற்கள்:
1. அறுகம்புல் 2. தருப்பைப் புல் 3. வாசனைப் புல் 4. காளான் புல் 5. கற்றாழைப் புல் 6. சோதிப்புல் 7. நாகதாளிப்புல் 8. சதுரக்கள்ளி 9. விலாமிச்சு வேர்ப்புல் 10. சிறுபஞ்சமூலப்புல் 11. காவட்டம் புல் 12. மேகநாதப் பூண்டுப் புல்
சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படும் சமூல வகைகள்
சமூலம் என்பது ஒரு தாவரத்தின் வேர், இலை, பூ காய் போன்ற எல்லாம் சேர்ந்தது.
மரம்:
1. அரச மரம் 2. ஆல மரம் 3. வில்வ மரம் 4. பூவரசு மரம். 5. முருங்கை மரம் 6. வாழை மரம் 7. இலந்தை மரம் 8. நுணா மரம் 9. மாதுளை மரம் 10. நறுவிலி மரம்.
செடி:
1. ஆவாரை 2. கண்டங்கத்திரி 3. மணத்தக்காளி 4.நாயுருவி 5. சங்கஞ்செடி 6. தூதுவளை 7. கருப்புப் பூலாஞ்செடி 8. வெண்குன்றி;.
சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் கிழங்குகள்:
1. அறுகன் கிழங்கு 2. கோரைக் கிழங்கு 3. வெங்காயம் 4.மருட் கிழங்கு 5. கிட்டிக் கிழங்கு 6. நிலப்பனங் கிழங்கு 7. பனங்கிழங்கு 8. அமுக்குரா கிழங்கு 9.பூமிச்சர்;க்கரை கிழங்கு 10. முள்ளங்கிக் கிழங்கு 11. மஞ்சள் கிழங்கு 12. கருணைக் கிழங்கு 13. இஞ்சி 14. பிரப்பங் கிழங்கு 15. கோவைக் கிழங்கு 16. கருடங் கிழங்கு 17. கூகைக் கிழங்கு 18. தண்ணீர் விட்டான் கிழங்கு 19. வள்ளிக் கிழங்கு 20. தாமரைக் கிழங்கு 21. சேப்பங் கிழங்கு 22. பொற்சீந்தில் கிழங்கு 23. மாகாளிக் கிழங்கு
சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் நீர்வாழ்வன:
கடல், ஏரி, குளம் ஆற்றிலுள்ள மீன்கள் திமிங்கிலம், நத்தை(ஓடு), ஆமை(ஓடு)
சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் பறப்பன:
கோழி (இறகு, முட்டை), மயில்(தோகை), புறா, சிட்டுக் குருவி.
சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் விலங்குப் பொருட்கள்
கோராசனை (பசுவின் பித்து), மைரோசனை (ஆட்டின் பித்து), கஸ்தூரி (மான்), பஞ்ச கவ்யம் (பசு), புனுகு (பூனை)

No comments:

Post a Comment